follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடு420 அரச நிறுவனங்களை கோப் குழுவுக்கு அழைக்க தீர்மானம்

420 அரச நிறுவனங்களை கோப் குழுவுக்கு அழைக்க தீர்மானம்

Published on

அனைத்து அரச நிறுவனங்களையும் கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

அதன்படி 420 அரச நிறுவனங்களை கோப் குழு முன் அழைக்க தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம், வருடாந்தம் அரச நிறுவனங்களை கோப் குழுவின் முன் அழைக்க வேண்டும் என்ற போதிலும், அது சரியான முறையில் செய்யப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஏப்ரல் மாதத்தில் மேலும் 04 அரச நிறுவனங்கள் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்படவுள்ளன.

இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம், காணி சீர்திருத்த ஆணைக்குழு, இலங்கை விமான சேவை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பன கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...