follow the truth

follow the truth

May, 5, 2025
Homeஉலகம்சபரிமலைக்கு செல்ல மூன்று நாள் தடை

சபரிமலைக்கு செல்ல மூன்று நாள் தடை

Published on

கேரளாவில் பெய்து வரும் கனமழையுடனான காலநிலை காரணமாக சபரிமலை கோயிலுக்கு செல்ல, நாளை மறுதினம் வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்புநிலை ஸ்தம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், ஆங்காங்கே மண்சரிவும் ஏற்பட்டிருப்பதால், பிற பகுதிகளிலிருந்து சாலைகளில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன. இதனால், ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல, நாளை மறுதினம் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்களின் பாதுகாப்புக்காக கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அதேபோல், நாளை (18ஆம் திகதி) பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கேரளாவில் பெய்துவரும் கனமழையினால் இதுவரையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 10 இற்கும் மேற்பட்டோர் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...