follow the truth

follow the truth

July, 14, 2025
HomeTOP1முட்டைக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்தாகும் சாத்தியம்

முட்டைக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்தாகும் சாத்தியம்

Published on

எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் ஒரு கிலோ வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒரு கிலோவிற்கு அதிகபட்ச சில்லறை விலை 920 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த விலைகளின்படி முட்டை ஒன்றின் விலை 50 ரூபாய்க்கு மேல் உள்ளது.

எனினும், முன்னதாக முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தொடர்புடைய இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் ஒரு முட்டைக்கு இரண்டு அதிகபட்ச விலை வரம்புகளை நிர்ணயித்துள்ளன.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி வர்த்தகர்கள் அநியாயமான இலாபம் ஈட்டுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எடைக்கு ஏற்ப முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தல் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனவரி முதல் ஜூலை வரை 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்

இந்த ஆண்டு கடந்த ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை 13ஆம் திகதி வரை, நாடு முழுவதும் 68...

கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த கைது தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் இல்லை

மலேசியாவில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இருவரும் பற்றிய தகவல் குறித்து,...

கைதுக்கு முன்னதாக முன் பிணை கோரி ராஜித சேனாரத்ன மனுத் தாக்கல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தன்னை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்வதற்கு முன்னதாக, முன் பிணையில் விடுவிக்கக்...