follow the truth

follow the truth

July, 13, 2025
Homeஉள்நாடுபுற்றுநோய் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளை வழங்கியது ஈரான்

புற்றுநோய் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளை வழங்கியது ஈரான்

Published on

ஈரான் குடியரசில் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியான புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் நேற்று(04) சுகாதார அமைச்சில் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

ஈரானிய தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே (Hashem Ashjazadeh) இந்த மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்த நன்கொடையின் கீழ், இந்த நாட்டிற்கு தேவையான பல மருந்துகள் உள்ளன. புற்றுநோய், இதய நோய், தோல் நோய், வைரஸ் தொற்று, உயர் ரத்த அழுத்தம், பார்கின்சன் போன்ற பல நோய்களுக்கான மருந்துகள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது இவ்வாறான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக் கொள்வது பெரும் நிம்மதி அளிப்பதாகவும், அதற்காக இலங்கை பிரஜைகள் சார்பாக ஈரான் மக்கள் உட்பட ஈரான் குடியரசிற்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...