5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

237

நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பின் படி, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேசத்திற்கும் காலி மாவட்டத்தின் பத்தேகம, நாகொட, எல்பிட்டிய மற்றும் யக்கலமுல்ல பிரதேசங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை, ரம்புக்கன, தெரணியகல, மாவனெல்ல, கேகாலை மற்றும் கலிகமுவ ஆகிய பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம, மாவத்தகம அலவ்வ மற்றும் பொல்கஹவெல பிரதேசங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் பல்லேபொல பிரதேசங்களிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here