கம்பளையில் காணாமல் போயிருந்த யுவதியை, தான் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
கம்பளை, எல்பிட்டிய வெலிகல்ல பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 22 வயதுடைய இளம் பெண் காணாமல் போயிருந்தார்.
சம்பவம் தொடர்பில் 24 வயதான சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
சடலத்தை புதைத்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்த போதிலும், சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கெலிஓயா நகரில் அமைந்துள்ள தான் பணியாற்றும் மருந்தகம் இடத்துக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து சென்ற யுவதியொருவர் காணாமல்போயுள்ளார் என கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மேலும் வீட்டிலிருந்து சுமார் (100 மீற்றர்) தூரத்தில் அமைந்துள்ள பள்ளி வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் குறித்த பெண் செல்வது பதிவாகியுள்ளது.