follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுஐந்து நாட்களாக காணாமல்போன பெண் கொலை? சந்தேகநபர் வாக்குமூலம்

ஐந்து நாட்களாக காணாமல்போன பெண் கொலை? சந்தேகநபர் வாக்குமூலம்

Published on

கம்பளையில் காணாமல் போயிருந்த யுவதியை, தான் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

கம்பளை, எல்பிட்டிய வெலிகல்ல பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 22 வயதுடைய இளம் பெண் காணாமல் போயிருந்தார்.

சம்பவம் தொடர்பில் 24 வயதான சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

சடலத்தை புதைத்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்த போதிலும், சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கெலிஓயா நகரில் அமைந்துள்ள தான் பணியாற்றும் மருந்தகம் இடத்துக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து சென்ற யுவதியொருவர் காணாமல்போயுள்ளார் என கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மேலும் வீட்டிலிருந்து சுமார் (100 மீற்றர்) தூரத்தில் அமைந்துள்ள பள்ளி வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் குறித்த பெண் செல்வது பதிவாகியுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

*தோல்வியின் பிதாவாக சஜித் மாறியுள்ளார்” – இராமலிங்கம் சந்திரசேகர்

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் சேவைக்கு பாராட்டு

நல்ல விடயங்களை உருவாக்குவதற்குப் பங்களிப்பதுடன், கெட்டதைத் தடுப்பதற்கு போராடுவதும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், அந்தவகையில் நிதி அமைச்சின்...

கெஹெலிய அவரது மனைவி, மகள் ஆகியோருக்கு பிணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(18) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும்...