follow the truth

follow the truth

June, 20, 2025
HomeTOP2கடவுச்சீட்டு வழங்க புதிய முறைமை அறிமுகம்

கடவுச்சீட்டு வழங்க புதிய முறைமை அறிமுகம்

Published on

கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறைமையை எதிர்வரும் முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்த குடிவரவு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வருகை தராமல் விண்ணப்பத்தை, இணையத்தளம் ஊடாக அனுப்பிவைக்கலாம் என்று அதன் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைவான கட்டணம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின், வங்கிக் கணக்கில் வைப்பிலிடலாம்.

அத்துடன்,நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 50 பிராந்திய செயலகங்களுக்கு தேவையான கைவிரல் அடையாளங்களைப் பதிவுசெய்ய முடியும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மூன்று நாட்களின் பின்னர், பதிவுத் தபால் மூலம், விண்ணப்பதாரரின் வீட்டுக்கே, கடவுச்சீட்டு அனுப்பிவைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட சீனர்கள்

இணையவழி குற்றம் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 85 சீன பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.  இலங்கையிலிருந்து விசேட விமானம்...

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன...

பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

எதிர்வரும் முதலாம் திகதி திட்டமிடப்பட்டிருந்த வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்...