சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன.
இதற்கமைய எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறுள்ளன.
எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகள் தவிர பாராளுமன்றம் கூடும் ஏனைய நாட்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரத்தை ஒதுக்க முடிவுசெய்யப்பட்டது.