follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2வேலை வாய்ப்பிற்காக தென் கொரியா சென்ற 2726 இலங்கையர்கள்

வேலை வாய்ப்பிற்காக தென் கொரியா சென்ற 2726 இலங்கையர்கள்

Published on

இந்த ஆண்டு மே மாதம் வரை 2726 இலங்கை தொழிலாளர்கள் தென் கொரிய வேலை வாய்ப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த நாட்டிற்கு அனுப்பப்பட்ட வேலை ஒப்பந்தங்களின்படி, 2694 இளைஞர்களும் 32 யுவதிகளும் உற்பத்தி, மீன்பிடி மற்றும் கட்டுமானத் துறைகளில் வேலைகளுக்காக வெளியேறியுள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் கொரிய வேலைகளுக்கு சுமார் 8000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அந்நாட்டு மனிதவளத் துறை ஒப்புக்கொண்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு நிலவரப்படி தற்போது நடைபெற்றுவரும் கொரிய மொழி தேர்வுக்கு 84886 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...