follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2தேர்தலுக்காக செலவிடப்பட்ட பணம் இதுவரை வழங்கப்படவில்லை

தேர்தலுக்காக செலவிடப்பட்ட பணம் இதுவரை வழங்கப்படவில்லை

Published on

தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை அச்சிட செலவிடப்பட்ட 20 கோடிக்கும் அதிகமான தொகை இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்க அச்சகத்துக்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக அரசாங்க அச்சகத்தின் செயற்பாடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்களை அச்சிடுவதற்கு பங்களிப்பு செய்த ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் தொடர்பான மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை திறைசேரியால் செலுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...