அநுராதபுரம் நகரில் உள்ள பாடசாலைகளுக்கு சிறுவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்களை சோதனையிட்ட போது, 106 பாடசாலை பஸ்களில் 65 பஸ்கள் போக்குவரத்துக்கு தகுதியற்றவை என தெரியவந்துள்ளது.
இங்கு, சில பஸ்களில் இயங்குவதற்கும், பாதுகாப்பிற்கும் இடையூறாக உள்ள கூடுதல் உதிரிபாகங்களை அகற்றவும், கூடுதல் குழாய்களை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டதுடன், இயங்க முடியாத தொழில்நுட்ப குறைபாடுள்ள பஸ்களும் இயக்கப்படாமல் அகற்றப்பட்டன.
14 நாட்களுக்குள் பொலிஸ் மற்றும் மோட்டார் போக்குவரத்து துறையின் ஒப்புதலை பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.