இலங்கை போக்குவரத்து சபைக்கான சீசன் டிக்கெட் கட்டணத்தை மாற்றியமைப்பது குறித்து ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு இரண்டு தடவைகள் கூடி இது தொடர்பில் ஆராய்ந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் இது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை
இதேவேளை, எதிர்வரும் 14ஆம் திகதி வரை பாடசாலை மாணவர்களுக்கான பருவச் சீட்டுகள் வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.