follow the truth

follow the truth

May, 14, 2024
HomeTOP2ஆகஸ்ட் முதல் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு

ஆகஸ்ட் முதல் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு

Published on

போதைப்பொருள் பாவனையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நோக்கில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பாவனையில் வாகனம் செலுத்திய 41 பேரை புலனாய்வு அதிகாரிகள் அடையாளம் காண முடிந்த நிலையில், இது தொடர்பில் பொலிஸார் அண்மையில் மேல் மாகாணத்தில் முன்னோடித் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இவர்களில் 19 பேர் பஸ் சாரதிகள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் வீதி விபத்துக்களுக்கு மதுபோதையில் வாகனம் செலுத்துவதே பிரதான காரணம் எனவும் போதைப்பொருள் பாவனையாளர்களை அடையாளம் காணும் சோதனைக் கருவிகளும் நாடளாவிய ரீதியில் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை முதல் அத்தியாவசிய சேவைகளையும் புறக்கணித்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக...

சிறுவர்களிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சல்

காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும்...

மதுபான உரிமப் பத்திரம் வழங்கும் சூதாட்டம் குறித்து சஜித் கேள்வி

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கும் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக இது வழங்கப்பட்டு வருகிறது. இடைத்தரகர்கள் பணம் சம்பாதிக்கும் விதமாக...