தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் 02 வருடங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்களில் இது பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், முன்னர் இருந்த அட்டை தட்டுப்பாடு காரணமாக குவிந்து கிடக்கும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் கையிருப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.