கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரமளிக்கும் வகையில் 3 திருத்தச் சட்டமூலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் தனிநபர் யோசனையாக இந்த 3 திருத்தச் சட்டமூலங்களும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
பிரதேச சபைகள் திருத்தச் சட்டம், நகர சபைகள் கட்டளை திருத்தச் சட்டம், மாநகர சபைகள் திருத்தச் சட்டம் ஆகிய சட்டங்களின் சரத்துகள் சில இந்த சட்டமூலத்தின் மூலம் திருத்தப்படவுள்ளன.