follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுமரக்கறிகளின் விலை 70% உயர்வு

மரக்கறிகளின் விலை 70% உயர்வு

Published on

மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையால் காய்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் 70 சதவீதம் உயர்ந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன.

கேக்கிரி, வெள்ளரி, வாழைக்காய், பலாக்காய், நோக்கல், முள்ளங்கி ஆகியவை மட்டுமே 100 ரூபாவுக்கு குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டாலும் போஞ்சி, கோவா, லீக்ஸ், பீட்ருட் போன்றவை 300 ரூபா தொடக்கம் 400 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

அத்தோடு மலையகத்தில் இருந்து வரும் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

மலையகத்தில் சீரற்ற வானிலை தொடர்வதால் விளைச்சல்கள் குறைவடைந்து சந்தைக்கு கொண்டுவரப்படும் காய்கறிகளின் அளவும் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிக்குன்குனியா நோய் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தக் கோரிக்கை

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துவதுடன், குறித்த நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்ட மற்றும் குறுகிய...

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சி

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி, பல பகுதிகளில் முட்டையின் விலை 20 ரூபாய் முதல் 24...

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு (VIDEO)

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...