follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு தொழில் அமைச்சு ஒப்புதல்

ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு தொழில் அமைச்சு ஒப்புதல்

Published on

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான தொழில்சார் உரிமைகளையும், அவர்களுக்கான நலன்புரி சார் விடயங்களையும் பாதுகாப்பதற்கு தனியானதொரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு தொழில் அமைச்சின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கமைய இது தொடர்பான சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைத்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார இணக்கம் தெரிவித்துள்ளார் என இதொகாவின் உப தலைவரும், தேசிய தொழில் ஆலோசனை சபை உறுப்பினருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

நாட்டில் அமுலில் உள்ள தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட திருத்தங்கள் தொடர்பில் ஆலோசனைகள், யோசனைகள் மற்றும் கருத்துகள் பல தரப்புகளிடம் இருந்தும் பெறப்பட்டன. இது தொடர்பில் தொழில் அமைச்சர் தலைமையில் கூட்டங்களும் நடத்தப்பட்டன.

பல பகுதிகளாக பிரிந்திருந்த தொழில்சார் சட்டங்களையும், நடைமுறைகளையும் ஒன்றிணைந்து, நாட்டில் ஒரே தொழில் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான உத்தேச வரைவு நகலே இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வரைவு நகல் தொடர்பான தமது நிலைப்பாட்டை, கருத்துகளை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் தேசிய தொழில் ஆலோசனை சபை உறுப்பினர்கள் முன்வைக்க வேண்டும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...