follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஉயர் ரக ஹோட்டலாக மாறும் "விசும்பாய"

உயர் ரக ஹோட்டலாக மாறும் “விசும்பாய”

Published on

பல அரச தலைவர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக இருந்த “விசும்பாய” உயர் ரக ஹோட்டலாக (Boutique Hotel) ஆக மாற்றப்படவுள்ளது.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் Azotels Hospitality Limited ஆகிய நிறுவனத்தினாலும் இன்று (07) நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் கைச்சாத்திடப்பட்டது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பிரகாரம் பழமைக்கு சேதம் ஏற்படாத வகையில் பெறுமதியான காணிகள் மற்றும் கட்டிடங்களை முதலீடு செய்யும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வேலைத்திட்டத்தின் கீழ் தான் விசும்பாய கட்டிடம் உயர் ரக ஹோட்டலாக மாற்றப்படும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த உயர்தர போட்டிக் ஹோட்டலாக (Boutique Hotel) இது உருவாக்கப்படும் மற்றும் உயர்தர சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு ஆடம்பர அறைகள், பொதுவான பகுதிகள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

 

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...