பல அரச தலைவர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக இருந்த “விசும்பாய” உயர் ரக ஹோட்டலாக (Boutique Hotel) ஆக மாற்றப்படவுள்ளது.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் Azotels Hospitality Limited ஆகிய நிறுவனத்தினாலும் இன்று (07) நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் கைச்சாத்திடப்பட்டது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பிரகாரம் பழமைக்கு சேதம் ஏற்படாத வகையில் பெறுமதியான காணிகள் மற்றும் கட்டிடங்களை முதலீடு செய்யும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வேலைத்திட்டத்தின் கீழ் தான் விசும்பாய கட்டிடம் உயர் ரக ஹோட்டலாக மாற்றப்படும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த உயர்தர போட்டிக் ஹோட்டலாக (Boutique Hotel) இது உருவாக்கப்படும் மற்றும் உயர்தர சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு ஆடம்பர அறைகள், பொதுவான பகுதிகள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.