follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2திரிபோஷ உற்பத்தி - விநியோகம் வழமைக்கு திரும்பியது

திரிபோஷ உற்பத்தி – விநியோகம் வழமைக்கு திரும்பியது

Published on

திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும் தற்போது மாதமொன்றுக்கு 13 இலட்சம் திரிபோஷா பொதிகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவிக்கின்றார்.

இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 03 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்காக குறித்த 13 இலட்சத்தை உற்பத்தி செய்கிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சந்தைக்கு தேவையான சோளத்தை உற்பத்தி செய்வதில் நாம் இன்னும் வெற்றிபெறவில்லை. கொரோனா வைரஸின் போது கூட நாங்கள் திரிபோஷா நிறுவனத்தை மூடவில்லை.

மேலும், நமக்குத் தேவையான சோளம் சரியான அளவு கிடைத்தால், தொடர்ந்து 20 நாட்களுக்கு 19 லட்சம் பாக்கெட்டுகளை உற்பத்தி செய்யலாம் என திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...