சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ், அந்த நிறுவனத்தின் முதல் இரண்டு எரிபொருள் கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, எரிபொருள் தாங்கிய இரண்டு கப்பல்களும் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.