follow the truth

follow the truth

July, 30, 2025
Homeஉள்நாடுஅரசியல் நயவஞ்சகர்களின் இழுத்தடிப்புகளாலும் நாசவேலைகளாலும் இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திகள் பின்தங்கியுள்ளது

அரசியல் நயவஞ்சகர்களின் இழுத்தடிப்புகளாலும் நாசவேலைகளாலும் இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திகள் பின்தங்கியுள்ளது

Published on

அரசியல் நயவஞ்சகர்களின் இழுத்தடிப்புகளாலும் நாசவேலைகளாலும் இரத்தினபுரி மாவட்டத்தின் அபிவிருத்தி எப்போதும் பின்தங்கியுள்ளது என துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற நிவித்திகல தொகுதிக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்திருந்தார்.

மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், நாட்டை உண்மையாக நேசிக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு தற்போது தேவைப்படுவதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு கட்சியிலும் திருடர்களும், நேர்மையானவர்களும் இருப்பதாகவும், அவர்களைத் தேர்ந்தெடுத்து மதிப்புமிக்க வாக்குகளைப் பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டது.

பழுத்த அமைச்சர்கள் தொடம்கொடவை அரவணைத்த விதத்தில் அனைத்தையும் அரவணைத்துச் செல்வதற்குப் பதிலாக இளம் அமைச்சர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட வேண்டுமெனவும், அந்த முறை தற்போது மாற வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த சில தீர்மானங்களுக்கு உரிய நேரத்தில் பலன் கிடைக்காமையின் காரணமாகவே ஜனாதிபதி பதவியை விட்டு விலக நேரிட்டதாகவும், ஆனால் அதனைப் பேணிக்காப்பதற்காக அவர் ஒருபோதும் மக்களைக் கைவிடவில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும், பொருளாதாரக் கண்ணோட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், சில இயற்கை அபாயப் பிரச்சினைகளால், மொத்த உள்நாட்டு உற்பத்தி வரலாற்றில் (2010, 2011 – 8.6% – 8.7%) பதிவு செய்யப்பட்டது. தயாரிப்பு சில சந்தர்ப்பங்களில் தடைபட்டது.

மஹிந்த ராஜபக்ச காலத்தில் நாடு விரைவான அபிவிருத்தியை அடைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நல்லாட்சி இயக்கம் நாட்டை மீண்டும் அதலபாதாளத்திற்கு கொண்டு சென்றதாகவும், பொருளாதாரம் நலிவடைந்த நாட்டை கையகப்படுத்தி நாட்டை ஸ்திரப்படுத்துவதில் கொரோனா தொற்றுடன் வந்த அனைத்து செயற்பாடுகளும் சீர்குலைந்துள்ளதாகவும், இது இலங்கையின் பொருளாதாரத்தை மட்டுமன்றி உலக நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த...

“கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த மாலைதீவுகள் பணியாற்றும்”

ஜனாதிபதி திசாநாயக்கவையும் அவரது தூதுக்குழுவையும் மாலைதீவிற்கு வரவேற்பது எனக்குக் கிடைத்த பெரும் மரியாதை மற்றும் பாக்கியம் ஆகும். உங்கள்...

நாமல் இன்று கைதாகும் சாத்தியம்

கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மனு மூலம்...