follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுஅரசியல் நயவஞ்சகர்களின் இழுத்தடிப்புகளாலும் நாசவேலைகளாலும் இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திகள் பின்தங்கியுள்ளது

அரசியல் நயவஞ்சகர்களின் இழுத்தடிப்புகளாலும் நாசவேலைகளாலும் இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திகள் பின்தங்கியுள்ளது

Published on

அரசியல் நயவஞ்சகர்களின் இழுத்தடிப்புகளாலும் நாசவேலைகளாலும் இரத்தினபுரி மாவட்டத்தின் அபிவிருத்தி எப்போதும் பின்தங்கியுள்ளது என துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற நிவித்திகல தொகுதிக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்திருந்தார்.

மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், நாட்டை உண்மையாக நேசிக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு தற்போது தேவைப்படுவதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு கட்சியிலும் திருடர்களும், நேர்மையானவர்களும் இருப்பதாகவும், அவர்களைத் தேர்ந்தெடுத்து மதிப்புமிக்க வாக்குகளைப் பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டது.

பழுத்த அமைச்சர்கள் தொடம்கொடவை அரவணைத்த விதத்தில் அனைத்தையும் அரவணைத்துச் செல்வதற்குப் பதிலாக இளம் அமைச்சர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட வேண்டுமெனவும், அந்த முறை தற்போது மாற வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த சில தீர்மானங்களுக்கு உரிய நேரத்தில் பலன் கிடைக்காமையின் காரணமாகவே ஜனாதிபதி பதவியை விட்டு விலக நேரிட்டதாகவும், ஆனால் அதனைப் பேணிக்காப்பதற்காக அவர் ஒருபோதும் மக்களைக் கைவிடவில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும், பொருளாதாரக் கண்ணோட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், சில இயற்கை அபாயப் பிரச்சினைகளால், மொத்த உள்நாட்டு உற்பத்தி வரலாற்றில் (2010, 2011 – 8.6% – 8.7%) பதிவு செய்யப்பட்டது. தயாரிப்பு சில சந்தர்ப்பங்களில் தடைபட்டது.

மஹிந்த ராஜபக்ச காலத்தில் நாடு விரைவான அபிவிருத்தியை அடைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நல்லாட்சி இயக்கம் நாட்டை மீண்டும் அதலபாதாளத்திற்கு கொண்டு சென்றதாகவும், பொருளாதாரம் நலிவடைந்த நாட்டை கையகப்படுத்தி நாட்டை ஸ்திரப்படுத்துவதில் கொரோனா தொற்றுடன் வந்த அனைத்து செயற்பாடுகளும் சீர்குலைந்துள்ளதாகவும், இது இலங்கையின் பொருளாதாரத்தை மட்டுமன்றி உலக நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...

வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து வேலைத்திட்டம்

2025 வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். அகில இலங்கை பௌத்த மகா...

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...