follow the truth

follow the truth

July, 31, 2025
HomeTOP2மதுபானம் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க தீர்மானம்

மதுபானம் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க தீர்மானம்

Published on

மதுபானம் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும் டின்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை கடந்த வருடம் கலால் திணைக்களம் கட்டாயமாக்கியது.

எவ்வாறாயினும் தற்போது குறிப்பிட்ட போத்தல்களில் போலி ஸ்டிக்கர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

அதன்படி, இந்த வாரம் முதல் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மதுபான உற்பத்தியாளர்கள் மீது விதிக்கப்படும் வரிகளை எவ்வித முரண்பாடுகளும் இன்றி அரசாங்கம் வசூலிப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...

எம்.பி. ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் பிணையில் விடுவிப்பு

சட்டவிரோதமாக போலி ஆவணங்களை பயன்படுத்தி சொகுசு கார் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானம்

பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான...