follow the truth

follow the truth

August, 19, 2025
HomeTOP29 ஈரானியர்கள் இலங்கை சிறைகளிலிருந்து விடுவிப்பு

9 ஈரானியர்கள் இலங்கை சிறைகளிலிருந்து விடுவிப்பு

Published on

இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் மனிதாபிமான நடவடிக்கையின் அடிப்படையில் ஒன்பது ஈரானிய மாலுமிகள் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு நேற்று (10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஈரானின் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தானில் இருந்து வந்த இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டு கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் இவர்கள் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹுஸைன் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் கடந்த வாரம் தெஹ்ரானில் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...