follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP29 ஈரானியர்கள் இலங்கை சிறைகளிலிருந்து விடுவிப்பு

9 ஈரானியர்கள் இலங்கை சிறைகளிலிருந்து விடுவிப்பு

Published on

இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் மனிதாபிமான நடவடிக்கையின் அடிப்படையில் ஒன்பது ஈரானிய மாலுமிகள் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு நேற்று (10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஈரானின் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தானில் இருந்து வந்த இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டு கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் இவர்கள் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹுஸைன் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் கடந்த வாரம் தெஹ்ரானில் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...