இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா சில நாட்களுக்கு மாத்திரம் கிடைக்கும் என புறக்கோட்டை மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 16ஆம் திகதி முதல் கோதுமை மா இறக்குமதி முற்றாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவின் கையிருப்பு தீர்ந்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் காரணமாக எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.