சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பத்தாயிரம் கையெழுத்துக்களை சேகரிக்கும் நிகழ்ச்சி இன்று (13) நாவலப்பிட்டி மாவட்ட அடிப்படை வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.
அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த கையெழுத்து சேகரிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பத்தாயிரம் கையொப்பங்களுடன் கூடிய மனு சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.