follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2அரச ஊழியர்களுக்கு “சேவாபிமானி” கடன் திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபாய்

அரச ஊழியர்களுக்கு “சேவாபிமானி” கடன் திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபாய்

Published on

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டங்கள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

“தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபித்ததன் முக்கிய நோக்கம் இந்த நாட்டின் வறிய மக்களுக்கு வீடு ஒன்றைக் கட்டிக் கொடுப்பதாகும். நாட்டில் இன்னும் பல வீடற்ற குடும்பங்கள் உள்ளன. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் செவன நிதியத்தின் கீழ் மிகவும் வறிய குடும்பங்களுக்கு வீடமைப்பு உதவிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், அரச ஊழியர்களுக்கு ‘சேவாபிமானி’என்ற கடன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்களுக்கு 14% வட்டியில் 10 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

‘விசிறி கடன்’என்ற மற்றொரு திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அரசு சாரா ஊழியர்களுக்கு 12% கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் மூலம் 10 பில்லியனுக்கும் அதிகமான தொகையை மக்களுக்கு வழங்கியுள்ளோம். ஆனால் மக்களுக்கு நாங்கள் கடனாகக் கொடுத்த சுமார் 5 பில்லியன் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை. தற்போது அந்த பணத்தை மீட்கும் பணியை துரிதப்படுத்தி இருக்கிறோம் என சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...