இரண்டாவது மின் பிறப்பாக்கி இன்றிரவு முதல் வழமைக்கு

326

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 08 ஆம் திகதி திடீரென செயலிழந்துள்ள நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கி இன்றிரவு(15) 8 மணி முதல் மீண்டும் மின் கட்டமைப்புடன் இணைத்துக்கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

திருத்தப்பணிகள் நிறைவடைந்தமையை அடுத்து இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் தேசிய மின் கட்டமைப்பிற்கு கிடைக்கவேண்டிய 270 மெகாவாட் மின்சாரம் இழக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்திருந்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here