கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் எசல பெரஹெராவின் போது ட்ரோன் மூலம் படம் பிடித்த சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனப் பிரஜை கண்டி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்