மின்சார நெருக்கடியை தீர்க்கும் வகையில் மாத்தறை ஏஸ் பவர் (Ace Power) தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் 23 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக எம்பிலிபிட்டிய ஏஸ் பவர் (Ace Power) தனியார் நிறுவனத்திடமிருந்தும் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.