நாட்டில் ஒரு முறை பயன்படும் பிளாஸ்டிக் உற்பத்தி பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ (strow), கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், கரண்டிகள், இடியப்பத் தட்டு, மாலைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த தடை விதிக்கப்படவுள்ளதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.