வறட்சியான காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டை, ரன்ன நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் நீர் வெளியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரன்ன நீர் வழங்கல் அமைப்பைச் சேர்ந்த 14,000 குடும்பங்களுக்கு நீர் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அங்குனகொலபலஸ்ஸ பகுதிக்கு எவ்வித தடையுமின்றி நீர் திறந்துவிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.