கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த “செங்கடகல மெனிக்கே” ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கம்பஹாவின் தரலுவை பிரதான பாதையில் ரயில் சேவைகள் தாமதமாகும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கம்பஹாவின் பெம்முல்ல மற்றும் தரல்வ ரயில் நிலையங்களுக்கு இடையில் குறித்த ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரதான பாதையில், சீரமைக்கப்படும் வரை ரயில்கள் தாமதமாகச் செல்ல வாய்ப்புள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.