follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP2ஜனாதிபதி கியூபா பயணம்

ஜனாதிபதி கியூபா பயணம்

Published on

G77குழு மற்றும் சீனா” உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் கியூபா செல்லவுள்ளார்.

“தற்போதைய அபிவிருத்தி சவால்களில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு” என்ற தலைப்பில் “G77 மற்றும் சீனா” அரச தலைவர்கள் மாநாடு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ளது.

கியூபா ஜனாதிபதி மிகயெல் டயஸ்-கனெலின் (Miguel Diaz-Canel) உத்தியோகபூர்வ அழைப்பையடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க “G77 மற்றும் சீனா” அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இந்த அரச தலைவர் உச்சி மாநாட்டுடன் இணைந்ததாக இலங்கை மற்றும் கியூபா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு பேச்சு வார்த்தையும் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில்...

இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை (21) இடம்பெறவுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ்...

ஈரான் தூதுவர் மீது தாக்குதல் – வர்த்தகருக்கு விளக்கமறியல்

இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைதான வர்த்தகர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை...