தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு முன்எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் களுத்துறை, காலி, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இன்று (07) மாலை 4 மணி முதல் நாளை (08) மாலை 4 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.