follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2இலங்கை சபாநாயகர் - பங்களாதேஷ் சபாநாயகர் சந்திப்பு

இலங்கை சபாநாயகர் – பங்களாதேஷ் சபாநாயகர் சந்திப்பு

Published on

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள பங்களாதேஷ் சபாநாயகர் (கலாநிதி) ஷிரின் ஷர்மின் சவுத்ரி (Shirin Sharmin Chaudhury) மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் மொஹமட் அரிஃபுல் இஸ்லாம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை குறுகிய காலத்தில் சமாளித்தமை தொடர்பில் பங்களாதேஷ் சபாநாயகர் (கலாநிதி) ஷிரின் ஷர்மின் சவுத்ரி இதன்போது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

மேலும், 2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இடம்பெறவுள்ள பங்களாதேஷ் பாராளுமன்றத் தேர்தலை அடுத்து இரு நாடுகளுக்குமிடையிலான பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள்புதுப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பங்களாதேஷுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறும் பங்களாதேஷ் சபாநாயகர் இதன்போது அழைப்புவிடுத்தார்.

அதற்கு மேலதிகமாக, இரு நாடுகளினதும் பாராளுமன்ற முறைமை, சுகாதாரச் சேவை, கைத்தொழில் துறை, சுற்றுலாத் துறை, முதலீடு மற்றும் ஏற்றுமதி போன்ற விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரிடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...