பாராளுமன்ற குழு பிரதிநிதித்துவத்திலிருந்து அலி சப்ரி ரஹீம் இடைநிறுத்தம்

223

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றக்
குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்துவது
தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால்
கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இன்று (22) பாராளுமன்றத்தில் அனுமதி
வழங்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம்
அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத துர்நடத்தை தொடர்பில்
விசாரிப்பதற்காக அவ்விடயம் தற்போது பாராளுமன்றத்தின் ஒழுக்கவியல்
மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதாலும்,
குறிப்பிட்ட உறுப்பினர் பாராளுமன்றத்தின் குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்து
செயற்படுவதானது பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை தொடர்பில் சிக்கல்
தன்மையைத் தோற்றுவிப்பதாலும் மேற்படி விசாரணை முடிவுறும் வரை
கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்கள் பாராளுமன்ற குழுக்களைப் பிரதிநிதித்துவம்
செய்தலாகாதென குறித்த தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் முன்வைத்த
எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here