2023 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கான திகதி ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த நிலையில், மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.