கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானமொன்று இன்றும் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கட்டுநாயக்கவிலிருந்து பெங்கொக் நோக்கி அதிகாலை 1.10 க்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூ.எல் 403 என்ற விமானம் இன்று பிற்பகல் வரை பயணத்தை முன்னெடுக்காததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.