follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுபாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட சுற்றறிக்கை வெளியீடு

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட சுற்றறிக்கை வெளியீடு

Published on

தரம் 10 ,11 , 12 மற்றும் 13 ஆம் ஆண்டு ஆகிய மாணவர்களுக்கு எதிர்வரும் 8 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா வௌியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலை ஊழியர்கள் சேவைக்கு அழைக்கப்பட வேண்டும் எனவும் இதற்கு மேலதிகமாக எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் அனைத்து கல்வி நிர்வாகப் பிரிவினரும் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் ஒரு வயதிற்கு குறைந்த பிள்ளைகள் உள்ள நிர்வாகப் துறையினர் சேவைக்கு சமூகமளிப்பது கட்டாயம் இல்லை என்பதுடன் வேறு நோய்த்தாக்கத்திற்குள்ளானவர்கள் அவசியமான நேரத்தில் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலை ஆரம்பிக்கப்படுகின்ற ஆரம்ப காலங்களில் பாடசாலை சீருடை கட்டாயமாக்கப்படவில்லை எனவும் பொருத்தமான உடையில் பாடசாலைக்கு வருவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி துறையினர் நன்மையடைந்து வருகின்றனர். இதற்கமைய தற்போது...

ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு பயணம்

இம்முறை ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. அவர்களை யாத்திரைக்கு...