follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2வேறு பல நாடுகளும் இலங்கை குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை

வேறு பல நாடுகளும் இலங்கை குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை

Published on

சீனாவைத் தவிர வேறு பல நாடுகளும் தமது விலங்கியல் பூங்காவிற்கு இலங்கையின் செங்குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று சபையில் தெரிவித்துள்ளார்.

குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான தீர்மானம் குறித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குரங்குகளை ஏற்றுமதி செய்வதை எதிர்த்து விலங்குகள் உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் மனு தாக்கல் செய்ததால், ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

குரங்குகள், காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்கள் போன்ற விலங்குகளால் ஆண்டுக்கு 20 பில்லியன் விவசாய பொருட்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.

குரங்குகளின் ஏற்றுமதிக்கு எதிரான விலங்குகள் உரிமை அமைப்புகளுடன் பயிர் சேதத்தைத் தடுப்பதற்கான அவர்களின் முன்மொழிவுகள் குறித்து விவாதித்ததாகவும், எனினும் அவை எதுவும் நடைமுறை ரீதியான தீர்வுகளைக் எவரும் வழங்கவில்லை எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...