IMF வருடாந்த பொதுக் கூட்டம் இன்று ஆரம்பம்

203

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று மொரோக்கோவின் மராகேச்சில் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 15ம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

2024ஆம் ஆண்டு இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையில் இருந்து பொருளாதார வளர்ச்சி நோக்கி நகர்வதை உறுதி செய்வதற்காக சர்வதேச நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு இதுவாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here