இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் வர விரும்பினால் தேவையான வசதிகளை வழங்கத் தயார்

676

காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக தற்போது இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களை இந்த நாட்டுக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களிடம் இருந்து இதுவரையில் கோரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் எந்தவொரு நபரும் இலங்கைக்கு வர விரும்பினால் அதற்குத் தேவையான வசதிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here