சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் ஐந்து நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பிரஜைகளிடம் விசாவிற்கான கட்டணத்தை அறவிடவேண்டாமென உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன, சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் இணைந்து அமைச்சரவை பத்திரமாக சமர்ப்பித்தனர்.