follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுஇரண்டு க்ரிப்டோகரன்சி கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்க துறைமுக நகர ஆணைக்குழு அனுமதி

இரண்டு க்ரிப்டோகரன்சி கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்க துறைமுக நகர ஆணைக்குழு அனுமதி

Published on

2021ம் ஆண்டின் 11ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் 2339/31ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

கொழும்பு துறைமுக நகரில் செயற்படும் மட்டத்தில் காணப்படும் 10 வணிக நிறுவனங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த நிறுவனங்களை ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்துக் காணப்படும் பிரச்சினை பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. இந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டபோது மூன்று முறைகளின் கீழ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது இங்கு தெரியவந்தது.

இந்த ஒப்பந்தங்கள் சட்ட ஏற்பாடுகளுக்கு உட்பட்டதாக, ஒரு முறைமையின் கீழ் கைச்சாத்திடப்படவில்லையென்பதைக் குழு சுட்டிக்காட்டியது. இதனால் இது தொடர்பில் நான்கு வாரங்களுக்குள் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டைக் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும் குழு பரிந்துரைத்தது. குறித்த பிரதேசத்துக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

நேற்றுமுன்தினம் (24) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இந்த விடயங்கள் தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இரண்டு க்ரிப்டோகரன்சி (Cryptocurrency) கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு துறைமுக நகர ஆணைக்குழு அனுமதி வழங்கியிருப்பது குறித்தும் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் கருத்தையும் அறிந்து குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...