follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுமறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கு பத்மஶ்ரீ விருது

மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கு பத்மஶ்ரீ விருது

Published on

மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தினால் விருது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்க களனி பல்கலைக் கழகத்தில் ஹிந்தி பேராசிரியராக கடமை புரிந்துள்ளார்.

1943இல் இந்தியாவில் பிறந்த அவர் லக்னோ பல்கலைக்கழகத்தில பயின்றுள்ளார். இலங்கை கல்வி நிறுவனங்கள் மத்தியில் ஹிந்தியை அறிமுகம் செய்து மேம்படுத்திய பேராசிரியர் தசநாயக்க, 1975 ஆம் ஆண்டில் நாக்பூரில் நடைபெற்ற முதலாவது உலக ஹிந்தி மாநாட்டில் பங்குகொள்வதற்கான வாய்ப்பினைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான இந்த விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது.

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...