follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுசீரற்ற காலநிலை - 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை – 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Published on

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும 24 மணிநேரத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்கள் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

வடமேல், மேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்படுகின்றன.

வட மாகாணத்திலும் மாத்தளை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில், தற்காலிகமான கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்பை குறைத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...