நாட்டில் 19,000 மெற்றிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சீனி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் இன்று (19) தெரணியகலவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்தார்.