25 வீதமான பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிப்பு

161

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நாடு முழுவதும் டெங்கு நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு 45 அதிக அபாய வலயங்கள் அடியாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு வருடத்தில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை எழுபதாயிரமாக அதிகரித்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து 34,645 பேர் பதிவாகியுள்ளனர்.

25 வீதமான பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here