follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1"ஜே.ஷா இலங்கை கிரிக்கெட்டை கட்டுப்படுத்தவில்லை"

“ஜே.ஷா இலங்கை கிரிக்கெட்டை கட்டுப்படுத்தவில்லை”

Published on

இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜே.ஷா இலங்கை கிரிக்கெட்டை கட்டுப்படுத்தவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையத்தளத்தின் யூடியூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரே இந்த நாட்டில் கிரிக்கெட்டை கட்டுப்படுத்துவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க சமீபத்தில் குற்றம்சாட்டினார்.

இந்த சர்ச்சைக்குரிய அறிக்கையால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தக் கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறும் ஜனாதிபதி விக்கிரமசிங்க, இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளரிடம் இவ்விவகாரம் குறித்துப் பேசியதாகக் கூறினார்.

“இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு ஜே.ஷா உதவுகிறார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நான் ஷாவிடம் பேசி, இந்த பிரச்சினையில் அவரது பெயர் இணைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தேன்…” 

ஐசிசி தடை குறித்து கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதிக்கப்படலாம் என்பதை புரிந்து கொண்டதாக தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு...

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின் தொலைபேசித்...

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை...